Songtexte.com Drucklogo

Vathikuchi Pathikadhuda Songtext
von S. P. Balasubrahmanyam

Vathikuchi Pathikadhuda Songtext

வத்திக்குச்சி பத்திக்காதுடா
யாரும் வந்து உரசற வரையில
வம்பு தும்பு வச்சுக்காதடா
யாரும் உன்னை உசுப்புற வரையில

ஈர்க்குச்சியாய் இல்லாம நீ தீக்குச்சியா இருடா
உள்ளே ஒரு உஷ்ணம் வந்தா
உன் வாழ்வில் வெளிச்சம் வரும்

வத்திக்குச்சி பத்திக்காதுடா
யாரும் வந்து உரசற வரையில
வம்பு தும்பு வச்சுக்காதடா
யாரும் உன்னை உசுப்புற வரையில

மனசு உடுத்தின கவலை துணி
எடுத்து அவிழ்த்தெறி எதற்கு இனி
இருக்கும் கண்ணீரையும்
ஏத்தம் நீ போட்டெடு
அழவா இங்கே வந்தோம்
ஆடு பாடு ஆனந்தமா


வத்திக்குச்சி பத்திக்காதுடா
யாரும் வந்து உரசற வரையில
வம்பு தும்பு வச்சுக்காதடா
யாரும் உன்னை உசுப்புற வரையில

முயற்சி செய்தால் சமயத்துல
முதுகு தாங்கும் இமயத்தையே
மனச இரும்பாக்கனும்
மலைய துரும்பாக்கனும்
ஆழ்கடல் கூட தான்
ஆறு போல மாறுமடா ஹோ

வத்திக்குச்சி பத்திக்காதுடா
யாரும் வந்து உரசற வரையில
வம்பு தும்பு வச்சுக்காதடா
யாரும் உன்னை உசுப்புற வரையில

ஈர்க்குச்சியாய் இல்லாம நீ தீக்குச்சியா இருடா
உள்ளே ஒரு உஷ்ணம் வந்தா
உன் வாழ்வில் வெளிச்சம் வரும்

வத்திக்குச்சி பத்திக்காதுடா
யாரும் வந்து உரசற வரையில
வம்பு தும்பு வச்சுக்காதடா
யாரும் உன்னை உசுப்புற வரையில

Songtext kommentieren

Log dich ein um einen Eintrag zu schreiben.
Schreibe den ersten Kommentar!

Quiz
Welche Band singt das Lied „Das Beste“?

Fans

»Vathikuchi Pathikadhuda« gefällt bisher niemandem.