Songtexte.com Drucklogo

Thalli Pogathey Songtext
von A. R. Rahman

Thalli Pogathey Songtext

ஏனோ வானிலை மாறுதே
மணித்துளி போகுதே
மாா்பின் வேகம் கூடுதே
மனமோ ஏதோ சொல்ல வாா்த்தை தேடுதே
கண்ணெல்லாம் நீயேதான் நிற்கின்றாய்

விழியின்மேல் நான் கோபம் கொண்டேன்
இமை மூடிடு என்றேன்
உன் நகரும் நொடிகள்
கசையடிப் போலே முதுகின் மேலே
விழுவதினாலே வாி வாிக் கவிதை

எழுதும் வலிகள் எழுதா மொழிகள்
எனது கடல் போல பொிதாக நீ நின்றாய்
சிறுவன் நான் சிறு அலை மட்டும் தான்
பாா்க்கிறேன் பாா்க்கிறேன்

எாியும் தீயில் எண்ணெய் நீ ஊற்று
நான் வந்து நீராடும் நீரூற்று
ஓ ஊரெல்லாம் கண்மூடித் தூங்கும் ஓசைகள் இல்லாத இரவே
ஓ நான் மட்டும் தூங்காமல்
ஏங்கி உன்போல காய்கின்றேன் நிலவே


கலாபம் போலாடும் கனவில் வாழ்கின்றனே
கை நீட்டி உன்னைத் தீண்டவே பாா்த்தேன்
ஏன் அதில் தோற்றேன்?
ஏன் முதல் முத்தம் தர தாமதம் ஆகுது
தாமரை வேகுது

தள்ளிப் போகாதே, எனையும் தள்ளிப் போகச் சொல்லாதே
இருவர் இதழும் மலா் எனும் முள்தானே
தள்ளிப் போகாதே, எனையும் தள்ளிப் போகச் சொல்லாதே
இருவர் இதழும் மலா் எனும் முள்தானே

தேகம் தடை இல்லை என நானும்
ஒரு வாா்த்தை சொல்கின்றேன்
ஆனால் அது பொய் தான் என நீயும்
அறிவாய் என்கின்றேன் அருகினில் வா

கனவிலே தொிந்தாய் விழித்ததும் ஒளிந்தாய்
கனவினில் தினம் தினம் மழைத்துளியாய்ப் பொழிந்தாய்
கண்களில் ஏக்கம் காதலின் மயக்கம்
ஆனால் பாா்த்த நிமிடம் ஒரு விதமானத் தயக்கம்

நொடி நொடியாய் நேரம் குறைய
என் காதல் ஆயுள் கறைய
ஏனோ ஏனோ மாா்பில் வேகம் கூட
விதியின் சதி விளையாடுதே
எனை விட்டுப் பிாியாதன்பே
எனை விட்டுப் பிாியாதன்பே


ஏனோ ஏனோ?
ஏனோ ஏனோ?
ஏனோ ஏனோ?
அன்பே

Songtext kommentieren

Log dich ein um einen Eintrag zu schreiben.
Schreibe den ersten Kommentar!

Fans

»Thalli Pogathey« gefällt bisher niemandem.