Songtexte.com Drucklogo

11 Yaarodu Yaaro Songtext
von Yuvan Shankar Raja

11 Yaarodu Yaaro Songtext

யாரோடு யாரோ
இந்த சொந்தம் என்ன பேரோ
நேற்று வரை நீயும் நானும்
யாரோ யாரோ தானோ
ஒர் ஆளில்லா வானில்
கருமேகங்களின் காதல்
கேட்க இடி மின்னல் நெஞ்சை நனைக்குமோ

வஞ்சம் கொண்ட நெஞ்சம்
உருகுது கொஞ்சம்
சிறுகதை தொடர்கதை ஆகுமோ
இது என்ன மாயம்
சூரியனில் ஈரம்
வெண்ணிலவில் விடியலும் தொடங்குமோ

நதி வந்து கடல்மீது சேரும்போது
புயல் வந்து மலரோடு மோதும்போது
மழை வந்து வெயிலோடு கூடும்போது
யாரோடு யாருமிங்கே


வஞ்சம் கொண்ட நெஞ்சம்
உருகுது கொஞ்சம்
சிறுகதை தொடர்கதை ஆகுமோ
இது என்ன மாயம்
சூரியனில் ஈரம்
வெண்ணிலவில் விடியலும் தொடங்குமோ

இதயங்கள் சேரும்
நொடிக்காக யாரும்
கடிகாரம் பார்ப்பது இல்லையே
நீரோடு வேரும்
வேரோடு பூவும்
தொடர்கின்ற நேசங்கள் வாழ்க்கையே

ஓர் உறவும் இல்லாமல்
உணர்வும் சொல்லாமலே
புது முகவரி தேடுதோ
வாய்மொழியும் இல்லாமல்
வழியும் சொல்லாமல்
பாசக்கலவரம் சேர்க்குதோ

ஒரு மின்மினியே மின்சாரத்தை தேடிவரும்போது
என்ன நியாயம் கூறு
விதிதானே


பறவைக்கு காற்று
பகையானால் கூட
சிறகுக்கு சேதம் இல்லையே
துளையிட்ட மூங்கில்
தாங்கிய இரணங்கள்
இசைக்கின்றபோதும் இன்பமே

சிறு விதையும் இல்லாமல்
கருவும் கொள்ளாமலே
இங்கு ஜனனமும் ஆனதே
ஒரு முடிவும் இல்லாமல்
முதலும் இல்லாமல்
காலம் புதிர்களைப் போடுதே

அட அருகம்புல்லின் நுனியில் ஏறி
நிற்கும் பனி போலே
எத்தனை நாள் வாழ்க்கை தெரியாதே

வஞ்சம் கொண்ட நெஞ்சம்
உருகுது கொஞ்சம்
சிறுகதை தொடர்கதை ஆகுமோ

Songtext kommentieren

Log dich ein um einen Eintrag zu schreiben.
Schreibe den ersten Kommentar!

Beliebte Songtexte
von Yuvan Shankar Raja

Quiz
Wer besingt den „Summer of '69“?

Fans

»11 Yaarodu Yaaro« gefällt bisher niemandem.