Songtexte.com Drucklogo

Onnoda Nadandhaa Songtext
von Ilaiyaraaja

Onnoda Nadandhaa Songtext

ஒன்னோட நடந்தா
கல்லான காடு
ஒன்னோட நடந்தா கல்லான காடு
பூத்தாடும் பூ வனம் ஆகிடுமே!

நீ போகும் பாத பூங்கால்களாளே
பொன்னான வழியாய் மாறிடுமே!

ஒன்னோட நடந்தா கல்லான காடு
பூத்தாடும் பூ வனம் ஆகிடுமே!
நீ போகும் பாத பூங்கால்களாளே
பொன்னான வழியாய் மாறிடுமே!

ராசாவே உன்னால ஆகாசம் விடியும்
லேசாக என் நெஞ்சம் பூக்கின்றதே!
ராசாத்தி ஆகாசம் உன்னால விடியும்
லேசாக என் நெஞ்சம் பூக்கின்றதே!
சொல்லாத மாயங்கள் உன்னால் நடக்குது

ஒன்னோட நடந்தா கல்லான காடு
பூத்தாடும் பூ வனம் ஆகிடுமே!


காத்தில் வரும் புழுதிய போல்
நம்ம தூத்துகிற ஊரு இது
துக்கத்தில துவண்டிருந்தா
அது தூக்கி விட நினைக்காது

முன்னேறி போக முட்டுக்கட்ட ஏது?
பின் திரும்பி பாக்காதே!
ஓந்துணைக்கு நான்தான்
ஏந்துணைக்கு நீதான்
என்றும் இது மாறாதே!
நல்வாக்கு ஊர் சொல்லும் காலம் வரும்!
அல்லல் இருளை விரட்டும் விடியல் வரும்!

கல்லான காடு ஒன்னோட நடந்தா
பூத்தாடும் பூ வனம் ஆகிடுமே!
பூத்தாடும் பூ வனம் ஆகிடுமே!

ஆராரிராரோ ஆராரிராரோ
ஆராரிராரோ ஆராரிராரோ
ஆராரிராராரி-ராரேராரோ
ஆராரிராராரி-ராரேராரோ

ஏத்தி வச்ச தீபம் ஒன்னு
எந்த சாமிகளும் பாக்கலையே!
சேத்து வச்ச கனவுகள
நிறைவேத்திவிட யாரும் இல்லையே!


நிக்காத காலம் நேராக ஓடும்
எப்போதும் மாறாது!
இல்லார்க்கும் ஏற்றம் என்றேனும் கொடுக்கும்
இல்லாமல் போகாது!

நம்பிக்கை கொண்டார்க்கு நாளை உண்டு
நம் வாழ்வில் என்றென்றும்
சந்தோஷம் பொங்கி வரும்!

கல்லான காடு ஒன்னோட நடந்தா
பூத்தாடும் பூ வனம் ஆகிடுமே!

ராசாவே உன்னால ஆகாசம் விடியும்
லேசாக என் நெஞ்சம் பூக்கின்றதே!
ராசாத்தி ஆகாசம் உன்னால விடியும்
லேசாக என் நெஞ்சம் பூக்கின்றதே!
சொல்லாத மாயங்கள் உன்னால் நடக்குது

ஒன்னோட நடந்தா கல்லான காடு
பூத்தாடும் பூ வனம் ஆகிடுமே!
பூத்தாடும் பூ வனம் ஆகிடுமே!

Songtext kommentieren

Log dich ein um einen Eintrag zu schreiben.
Schreibe den ersten Kommentar!

Fans

»Onnoda Nadandhaa« gefällt bisher niemandem.