Songtexte.com Drucklogo

Kannan Vanthu Songtext
von S. Janaki

Kannan Vanthu Songtext

கண்ணன் வந்து பாடுகின்றான் காலமெல்லாம்
கண்ணில் என்ன கோபம் என்றான் காதல் சொன்னான்
காற்றில் குழலோசை பேசும் பூ மேடை மேலே
கண்ணன் வந்து பாடுகின்றான் காலமெல்லாம்
கண்ணில் என்ன கோபம் என்றான் காதல் சொன்னான்
காற்றில் குழலோசை பேசும் பூ மேடை மேலே
கண்ணன் வந்து பாடுகின்றான் காலமெல்லாம்
கண்ணில் என்ன கோபம் என்றான் காதல் சொன்னான்

கீதங்கள் சிந்தும் கண்கள் மூடுதே
பாதங்கள் வண்ண பண்கள் பாடுதே
மோகங்கள் என்னும் கண்ணன் தேரிலே
தாகங்கள் இன்ப கள்ளில் ஊறுதே
காதல் என்னும்-ஓ-ஓ
காதல் என்னும் கூட்டுக்குள்ளே
ஆசை குயில் கொஞ்சுதம்மா
இவள் வண்ணங்கூடி சின்னந்தேடி
மின்னும் தோளில் கன்னங்கூட
சந்தம் பாடி சொந்தந் தேடி
சொர்க்கங்கள் மலர்ந்ததோ


கண்ணன் வந்து பாடுகின்றான் காலமெல்லாம்
கண்ணில் என்ன கோபம் என்றான் காதல் சொன்னான்
காற்றில் குழலோசை பேசும் பூ மேடை மேலே
கண்ணன் வந்து பாடுகின்றான் காலமெல்லாம்
கண்ணில் என்ன கோபம் என்றான் காதல் சொன்னான்

வானத்தில் செல்ல கண்ணன் பாடுவான்
கானத்தில் சின்ன பெண்ணும் ஆடுவாள்
ஆயர்கள் மத்து சத்தம் போலவே
ஆனந்த முத்தம் சிந்தும் நேரமே
மாலை நிலா-ஆ-ஆ
மாலை நிலா பூத்ததம்மா
மௌன மொழி சொல்லுதம்மா
ஒரு அந்தி பூவில் சிந்தும் தேனில்
வண்டு பேசும் தென்றல் வீசும்
கண்ணன் பாட கண்கள் மூட
கன்னங்கள் சிவந்ததோ

கண்ணன் வந்து பாடுகின்றான் காலமெல்லாம்
கண்ணில் என்ன கோபம் என்றான் காதல் சொன்னான்
காற்றில் குழலோசை பேசும் பூ மேடை மேலே
கண்ணன் வந்து பாடுகின்றான் காலமெல்லாம்
கண்ணில் என்ன கோபம் என்றான் காதல் சொன்னான்

Songtext kommentieren

Log dich ein um einen Eintrag zu schreiben.
Schreibe den ersten Kommentar!

Beliebte Songtexte
von S. Janaki

Fans

»Kannan Vanthu« gefällt bisher niemandem.