Songtexte.com Drucklogo

Kalaigiradhey Kanave Songtext
von Govind Vasantha

Kalaigiradhey Kanave Songtext

கலைகிறதே கனவே
விடியாதோ இரவே
வாழ்வே இனிமேல்
வழி ஆகாதா

மறைத்திடலாம் சாட்சி
மறைந்திடுமோ காட்சி
உண்மை ஒரு நாள் அரங்கேறாதா

ஊக்க துணையே உன் சொல் வழியே
ஏக்கம் தந்தால் என்னாவேன்
காக்கும் கரமே விழிகள் மூட
எங்கே செல்வேன் இனி நானே

வழி இல்லா காட்டில் தொலைந்தேனா
இல்லை, வழி தேடி வானம் தொடுவேனா

இலையெல்லாம் விழுந்தாலும்
மரம் இங்கு வீழாது
இளவேனில் அது நீதானே


இருள் உன்னை சூழ்ந்தாலும்
இருளாகி போகாதே
ஒளி ஏந்து
அடி பகலே நீ

காலங்கள் உன்னோடு
காயங்கள் காற்றோடு
வா வா வாழ்ந்து பார்க்கலாம்
போகாத ஆழங்கள்
ஆகாய தூரங்கள் போவோம்
வா வென்று வான்னேறி

வாள் கொண்டு சாய்த்தாலும்
போராடும் வேறாகி
வா வா நிமிர்ந்து நிற்கவா
பூ போல வீழாமல்
வேர் போல நீ மாறி
வா வா வாகை சூடவா

புதிர்கள் யாவும் விடைகள் ஆகி
உடலில் சிறகை தருகிறதே
விடைகள் தந்த திசையில் இன்று
புதியதாய் பறவை பறக்கிறதே

பிறக்காத விடியல் கிடையாது பெண்ணே
திறக்காத திசைகள் கிடையாது

Songtext kommentieren

Log dich ein um einen Eintrag zu schreiben.
Schreibe den ersten Kommentar!

Beliebte Songtexte
von Govind Vasantha

Fans

»Kalaigiradhey Kanave« gefällt bisher niemandem.